செவ்வாய், 18 ஜூன், 2019

வெகுமக்ககளின் சிந்தனையற்ற ஒப்புதல் | கெப்லர் | Motivational Quotes in Tamil

வெகுமக்ககளின் சிந்தனையற்ற
ஒப்புதலை விட,
ஒற்றை அறிவார்ந்த மனிதரின் கடுமையான
விமர்சனத்தை நான் மிகவும் விரும்புகிறேன்.

                                                       -ஜோகன்னஸ் கெப்லர்

வெள்ளி, 9 நவம்பர், 2018

Oru viral Puratchi Song Lyrics – Sarkar

ஒரு விரல் புரட்சி பாடல் வரிகள்

நேத்து வர…ஆஅ..
ஏமாளி ஏமாளி ஏமாளி…
இன்று முதல்
போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி
போராளி போராளி
ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….
ஏழ்மையை
ஒழிக்கவே
செய்யடா
முயற்சியே
ஏழையை
ஒழிப்பதே
உங்களின்
வளர்ச்சியா…
திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு
விரலின் நுனியில் விழட்டும் கருப்பு…
உன்முறை அய்யோ நீ தூங்கினாய்
காசை பெற்று பின் ஏங்கினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்…
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….
ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே
நாம் ஒன்றாய்
கேள்விகள் கேட்டாலே
அடக்கும் கை அங்கு நடுங்காதோ…
எளிய மனிதன் எழுதும் விதியிலே
புதிய உலகம் தொடங்காதோ…
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….
கரை வேட்டிகள் அங்கங்கு சிலை
எங்கள் வெயர்வையும் ரத்தமும் விலை
வெறும் வேதனையே இங்கு நிலை
எழு மாற்ற பறவையே……
நீதியை கொல்கிறான்
மௌனமாய் போகிறோம்
ஊமைகள் தேசத்தில்
காதையும் மூடினோம்
மக்களின் ஆட்சியாம்
என்று நாம் வாழ்கிறோம்
போர்களை தாண்டி தான்
சோற்றையே காண்கிறோம்
துரோகங்கள் தாக்கியே
வீதியில் சாகிறோம்,
அழுதிடும் கண்களில்
தீயன வாழ்கிறோம்.
ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே
ஏழ்மையை
ஒழிக்கவே
செய்யடா
முயற்சியே
ஏழையை
ஒழிப்பதே
உங்களின்
வளர்ச்சியா….
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….
ஊஊஊஊ ஊஊஊ ஊஊ……
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர்காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர்காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர்காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்
எதிர்காலத்தை சூறை ஆடினாய்!

சனி, 2 ஜூன், 2018

யாயும் ஞாயும் பாடல் வரிகள்

 

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல் நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.


என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன. (அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது. மண்ணோடு கலந்த நீரை எப்படி பிரிக்கமுடியாதோ, அவ்வாறே நம்மையும் பிரிக்க முடியாது.)

 

விளக்கம்

 

யாயும்-என் தாயும், ஞாயும்- உன் தாயும், யார் ஆகியரோ- யாருக்கு யார் உறவினர், எந்தையும்- என் தந்தையும், நுந்தையும்- உன் தந்தையும்,எம்முறை- எந்த முறையில், கேளீர்- உறவினர்,யானும் நீயும் –நானும்- நீயும் நானும், எவ்வழி- எந்த உறவின் வழியாக, அறிதும்- அறிந்து கொண்டோம்? செம்புலப் பெயல் நீர் போல-செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம்– அன்பான நெஞ்சங்கள், தாம் – தாமாகவே(யாதொரு உறவுமின்றி), கலந்தனவே- கலந்துகொண்டனவே.
எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அவ்வாறே தலைவனின் அன்பினையும் தலைவி ஏற்றாள். இங்கே நிலம்-தலைவி, நீர்- தலைவன் .
பண்பும் அன்பும் போட்டியிடும் இப்பாடல் என்றும் நம் உள்ளத்திலும் செம்புலப்பெயல் நீராதல் இயல்புதானே?


வியாழன், 31 மே, 2018

தூக்கணாங் குருவி

           
          

தூக்கணாங் குருவிக் கூட்டை பார்த்திருக்கிறீர்களா? அதன் அழகைச் சொல்ல வார்த்தைகள் ஏது?. தன் சின்ன அலகால் கூடு கட்டும் அதன் நேர்த்தியே அலாதியானது. கிராமங்களின் வயல்வெளிகளில், வளர்ந்து நிற்கும் நெடுமரங்களின் கிளைகளில் காற்றில் அசைந்து கொண்டிருக்கும் இந்த சின்னக் கூடுகள் சொல்லும் பாடங்கள் ஏராளம்.

புதன், 30 மே, 2018

உன்னால் முடியும்


                                 உன்னால் முடியும் !  நீ முயன்றால் விடியும் !




போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன்.  வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

செவ்வாய், 29 மே, 2018

Karuppasamy

வெற்றிடமான பக்கங்களா !

அல்லது 

வேன்டுமென்றே வெற்றிடமாக்கப்பட்ட பக்கங்களா 

தெரிந்தும் தெரியாமல் திருப்பிக்கொண்டு

செல்கிறேன் 

என் வாழ்க்கை என்ற புத்தகத்தை !

புதன், 6 டிசம்பர், 2017

உன்னால் முடியும் !

1). செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது. 

 

2). நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை.

 

3). சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

 

4). முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ,அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது

 

5). எல்லோருமே உலகை மாற்றிவிடத் துடிக்கின்றனர். ஆனால், எவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை!

 

வியாழன், 23 நவம்பர், 2017

துன்பத்திற்கு துன்பம் கொடு


1). தனக்கு நேரக்கூடிய துன்பத்தை மனதின் சமநிலையோடு பொறுத்துக்கொள்கிறவனே மனிதருள் உயர்ந்தவன்.

2). சிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்குகிறபோது மனிதன் தனக்குத் தானே தலைவனாகிறான்.

3). உங்கள் மனம் அழகானதாக இருந்தால் நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும்.

4). பயத்தை வெல்லாவதன் , வாழ்வின் முதல் பாடத்தை கல்லாவதன்

5). முடிந்ததை செய்துவிட்டால் அதுவே எல்லாவற்றிலும் வெற்றி

6). தைரியத்தின் முதல் சோதனை தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்

7). வெற்றி என்பது அவரவர் எண்ணுகிற எண்ணத்தை பொறுத்தே கிடைக்கிறது

புதன், 22 நவம்பர், 2017

சார்லி சாப்ளின்

இந்த நிலை மாறிவிடும்!

"வாழ்நாள் முழுவதும் பாேர்க்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?’’ எனக் கேட்டார்கள். சாப்ளின் சிரித்தார்... ‘‘இந்த நிலை  மாறிவிடும் என்பைத நான் எப்பாேதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதாே இந்தக் கணத்திலும்கூட"



செவ்வாய், 21 நவம்பர், 2017

இரண்டாவதாக வருபவைன உலகம் ஒரு பாேதும் ஞாபகம் வைதுக் காௌ்வதில்லை

‘‘சூரியனுக்கு ஒரு காரியம் இருக்கிறது; சந்திரனுக்கு ஒரு காரியம் இருக்கிறது; ஏன், மிருகங்களுக்கு கூட செய்வதற்கு என ஒரு காரியம் இருக்கிறது. அதுேபால ஒவ்வாெரு மனிதனும் தனக்குரிய காரியம் எது என்பைதக் கண்டறிந்து அதில் முழுமையாக ஈடுபட்டு, முதல்வனாக வெற்றி பெற வேண்டும். ஏனென்றால், இரண்டாவதாக வருபவைன, உலகம் ஒரு பாேதும் ஞாபகம் வைதுக் காௌ்வதில்லை!’’

வெள்ளி, 20 அக்டோபர், 2017

ஆசையே துன்பத்துக்குக் காரணம்

  இக்கணத்தில் வாழு

"ஆசையே துன்பத்துக்குக் காரணம். வாழ்வு சுலபமாக இருக்க வேண்டுமானால் சரியான சிந்தைன, சரியான புரிதல், சரியான பேச்சு, சரியான நடவடிக்கை, சரியான வாழ்வுமுைற, சரியான முயற்சி, சரியான பராமரிப்பு மற்றும் சரியான செயல்பாடு ஆகியைவ வேண்டும்".