தூக்கணாங் குருவிக் கூட்டை பார்த்திருக்கிறீர்களா? அதன் அழகைச் சொல்ல வார்த்தைகள் ஏது?. தன் சின்ன அலகால் கூடு கட்டும் அதன் நேர்த்தியே அலாதியானது. கிராமங்களின் வயல்வெளிகளில், வளர்ந்து நிற்கும் நெடுமரங்களின் கிளைகளில் காற்றில் அசைந்து கொண்டிருக்கும் இந்த சின்னக் கூடுகள் சொல்லும் பாடங்கள் ஏராளம்.
வியாழன், 31 மே, 2018
தூக்கணாங் குருவி
தூக்கணாங் குருவிக் கூட்டை பார்த்திருக்கிறீர்களா? அதன் அழகைச் சொல்ல வார்த்தைகள் ஏது?. தன் சின்ன அலகால் கூடு கட்டும் அதன் நேர்த்தியே அலாதியானது. கிராமங்களின் வயல்வெளிகளில், வளர்ந்து நிற்கும் நெடுமரங்களின் கிளைகளில் காற்றில் அசைந்து கொண்டிருக்கும் இந்த சின்னக் கூடுகள் சொல்லும் பாடங்கள் ஏராளம்.
புதன், 30 மே, 2018
உன்னால் முடியும்
உன்னால் முடியும் ! நீ முயன்றால் விடியும் !
ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.
இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்
நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.
தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.
செவ்வாய், 29 மே, 2018
Karuppasamy
வெற்றிடமான பக்கங்களா !
அல்லது
வேன்டுமென்றே வெற்றிடமாக்கப்பட்ட பக்கங்களா
தெரிந்தும் தெரியாமல் திருப்பிக்கொண்டு
செல்கிறேன்
என் வாழ்க்கை என்ற புத்தகத்தை !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)